Daily Medicines Tips :

06.09.2018


03.09.2018


02.09.2018


01.09.2018


31.08.2018


30.08.2018 - இஞ்சி சாறுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தால் சொத்தைப்பல் குறையும்.


29.08.2018 - சிறிதளவு வெங்காயச் சாறுடன், தேன் கலந்து சாப்பிட சீதபேதி குறையும்.



28.08.2018 - வெள்ளைப் பூண்டு பல் மேல் திருகி அதில் வரும் நீரை பூசி வந்தால் சொட்டை நீங்கும்.


27.08.2018 - பனைவெல்லத்தை பசுவெண்ணெயுடன் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.


26.08.2018 - பூசணிக்கொடியின் கொழுந்து இலைகளை எடுத்து சாறு எடுத்து கசக்கி சாறு எடுத்து தலையில் தடவி வர சொட்டையில் முடி முளைக்கும்.


25.08.2018 - உளுந்தைப் பொடியாக்கி அதை சாதத்தில் போட்டுக் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.


24.08.2018 - சிறிது மிளகை எடுத்து அதனுடன் கற்பூரம் வைத்து லேசாக தண்ணீர் விட்டு நன்றாக மை போல அரைத்து வலியுள்ள இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் சுளுக்கு, வாய்வுப் பிடிப்பு வீக்கம் குறையும்.


23.08.2018 - மாதுளம் பழத்தோலை எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து அதில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து அரை கப் எருமைத் தயிரில் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.


22.08.2018 - முட்டைகோஸின் வெளிப்புறத்தில் இருக்கும் கடின பகுதியை உரித்து நீர் விட்டு மென்மையாக மாறும் அளவுக்கு நன்றாக காய்ச்சி பிறகு அந்த முட்டைகோஸை எடுத்து பருத்தி துணியில் வைத்து சுளுக்கு இருக்கும் இடத்தில் 3 மணி நேரம் கட்டி வந்தால் சுளுக்கு குறையும்.


21.08.2018 - கசகசாவை வறுத்துத் தூள் செய்து, நாட்டுச் சர்க்கரை சோ்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.


20.08.2018 - முருங்கைப்பட்டை, சுக்கு, பெருங்காயம், கடுகு முதலியவற்றை அரைத்து சூடாக்கி இளஞ்சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் பற்றுப்போட சுளுக்கு குறையும்.


19.08.2018 - வேப்பிலையைச் சட்டியில் போட்டு தீயும்படி கருகியபின்பு இடித்துப் பொடியாக்கி, வசம்பு துண்டையும் கருக்கிப் பொடியாக்கிக் கொள்ளவேண்டும். வேப்பிலைப் பொடி ஒரு ஸ்பூன், வசம்பு தூள் 1/4 ஸ்பூன் ஆகியவற்றை மோரில் கலந்து காலை, மதியம், மாலை என மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.


18.08.2018 - சிறிது மிளகை எடுத்து அதனுடன் கற்பூரம் வைத்து லேசாக தண்ணீர் விட்டு நன்றாக மை போல அரைத்து வலியுள்ள இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் சுளுக்கு, வாய்வுப் பிடிப்பு வீக்கம் குறையும்.


17.08.2018 - நல்லெண்ணெயை ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து பொங்கும் போது சோற்றை அதில் போட்டு ஒரு கோழி முட்டையை உடைத்து ஊற்றி கிண்டி, அதில் வெங்காயத்தை போட்டு சோற்றை தாளித்துச் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.


16.08.2018 - வெள்ளைப் பூண்டை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவி வர சுளுக்கு குணமாகும்.


15.08.2018 - வாழைப் பழத்தை எடுத்துக் கீறி அதனுள் வெந்தயத்தை பன்னிரண்டு மணி நேரம் வைத்திருந்து, அந்த வாழைப் பழத்தோடு வெந்தயத்தையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.


14.08.2018 - நுரையீரலில் சளி குறைய இலவங்கப்பட்டை துண்டுகள், சிறிது மிளகு, தண்ணீர், தேன் கலந்து குடித்து வருதல் நல்லது.


13.08.2018 - மாசிக்காயை எடுத்து கல்லில் உரசி அல்லது இடித்துப் பொடியாக்கி சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.


12.08.2018 - முருங்கைகாய் நசுக்கி சாறெடுத்து அதில் சம அளவு தேன் கலந்து தினமும் சாப்பிட சளி நீங்கும்.


11.08.2018 - உளுந்தைப் பொடியாக்கி அதை சாதத்தில் போட்டுக் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.


10.08.2018 - சளி போக பசும்பாலில் சிறிதளவு ஒமம் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்கவும்.


09.08.2018 - கண்ணாடி துண்டு குத்தி சிறுபகுதி காலில் இருந்தால் ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து கட்ட வெளியேறிவிடும்.


08.08.2018 - முளைகட்டிய பச்சை பயறு,சின்ன வெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட பருத்த கன்னம் பெறும்.


06.08.2018 - ஜாதிக்காயை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து இழைத்து குழந்தைகளுக்குக் கன்னத்தில் கருப்புப் புள்ளியுடன் சொர சொரப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் கன்னத்திலுள்ள கருப்புப் புள்ளி குறையும்.


05.08.2018 - கம்பளி பூச்சி கடிக்கு வெற்றிலையை கடிவாயில் வைத்து அழுத்தி தேக்க குணம் பெறலாம்.


04.08.2018 - முருங்கைப் பிஞ்சை நெய்யில் வதக்கி உண்டு வந்தால் எலும்புகளுக்கு ஊட்டம் கிடைக்கும்.


03.08.2018 - நாய், பூனை, எலி போன்றவை கடித்தால் உடனே வெங்காயத்தையும், உப்பையும் அரைத்து கடிப்பட்ட இடத்தில் தடவி வந்தால் விஷம் குறையும்.


02.08.2018 - உப்பு, மஞ்சள், சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக மை போல அரைத்து பூரான், எலி, பெருச்சாளி, நாய், பூனை போன்றவை கடித்த கடிவாயில் தேய்த்து வந்தால் விஷம் குறையும்.


01.08.2018 - வெள்ளைபூண்டை நசுக்கி தொடர்ந்து தழும்பின் மீது தேய்த்து வர குணமாகும்


31.07.2018 - சுக்கும் பனை வெல்லமும் சேர்த்து காபி தயாரித்து சாப்பிட வாயுவினால் ஏற்படும் மார் வலி, எரிச்சல் குணமாகும்


30.07.2018 - வெள்ளைப்பூண்டுச் சாறும், வெற்றிலைச் சாறும் கலந்து தடவி வர எச்சில் புண் குறையும்.


29.07.2018 - வெள்ளைப் பூண்டையும், சுண்ணாம்பையும் எடுத்து அரைத்து ஊமை காயத்தின் மேல் போடலாம்.



28.07.2018 - இலந்தை மர இலைகளில் உள்ள சாறு எடுத்து உள்ளங்கை மற்றும் கால்களில் தடவிவர உள்ளங்கை மற்றும் கால்களில் அதிகமாக வியர்ப்பது நிற்கும்.



27.07.2018 - பாகல் இலை சாறை உள்ளங்காலில் தடவினால் உள்ளங்கால் எரிச்சல் குறையும்.


26.07.2018 - புளியை உள்நாக்கினுள் வளரும் சதைபகுதியில் தடவிவர சதை வளர்தல் குறையும்.


25.07.2018 - செம்பருத்தி பூக்களை நெய்யில் வறுத்து சாப்பிட உதிரப்போக்கு குறையும்.


24.07.2018 - தக்காளிச் சாறு, எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து குடிக்க உடல் வெப்பம் குறையும்.


23.07.2018 - வாயின் இரண்டு ஓரங்களிலும் வெந்து சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கும். இது தான் மைனா வாய். இத்தகையவர்கள் 4 நாட்கள் தொடர்ந்து வடிக்கஞ்சி குடிக்க வேண்டும்.


22.07.2018 - வெந்தயத்தை வறுத்து, வறுத்த கோதுமையை சேர்த்து பொடி செய்து, குடித்து வர உடல் வெப்பம் குறையும்.


21.07.2018 - கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணையுடன் கலந்து தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்


20.07.2018 - விளக்கெண்ணெய் எடுத்து அதில் பேயன் வாழைப்பழத்தை உரித்து துண்டுகளாக வெட்டிப் போட்டு அதனுடன் பனங்கற்கண்டை தூள் செய்து போட்டு ஊறிய பின் சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறையும்.


19.07.2018 - கோடக இலையை கஷாயம் செய்து1 வார காலம் வாய் கொப்பளித்து வர நாக்கு ரணம்,வாய்,உதடு ரணம் போன்றவை சரியாகும்.


18.07.2018 - நொச்சி இலைகளை எடுத்து சிறிது பனை வெல்லம் சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு பாதி டம்ளர் ஆகும் வரை நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் உடல் வெப்பம் குறையும்.


17.07.2018 - கற்கண்டைப் பாகாக்கிக் ஏலக்காய், சுக்கு பொடித்துப் போட்டு வில்வப் பூவை கலந்து வேக வைத்து தேன்கிளறி சாப்பிட உடல் வலிமை பெறும்.


15.07.2018 - ஆவாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.


14.07.2018 - உசிலை இலையை சீயக்காய்க்கு பதிலாக தலைக்கு பயன்படுத்தி குளித்து வர உடல் வலி தீரும்.


13.07.2018 - முருங்கை இலைச் சாறு தினமும் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.


12.07.2018 - சிறுகீரை, பார்லி ஆகியவற்றோடு சீரகம், மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.


11.07.2018 - அவரை இலையை தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வர உடல் நிறம் பளபளக்கும்.


10.07.2018 - நல்லெண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி குளித்து வந்தால் உடல் சூடு தணியும்


09.07.2018 - சர்க்கரை வள்ளிகிழங்கை காயவைத்து இடித்து துளாக்கி பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை கூடும் உடல் பலம் பெரும்.


08.07.2018 - நல்லெண்ணெயை அடுப்பில் வைத்து, 3 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது, சிறிதளவு மிளகு ஒன்றிரண்டாக பொடி செய்து, சீரகம், வெந்தயம் சிறிதளவு ஆகியவற்றை போட்டு நன்கு சூடாக்கி பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளவும். வாரம் 1 முறை இந்த எண்ணெயை தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் கண் எரிச்சல், உடல் சூடு குறையும்.


07.07.2018 - உடல் பலம் பெற கருங்குருவை அரிசியில் செய்த காடியில் கீழாநெல்லி சமுலத்தை சூரணம் செய்து போட்டு சாப்பிட்டு வந்தால் இளநரை குறைந்து இளமை அதிகரிக்கும். உடல் பலம் பெறும்.


06.07.2018 - பருப்புக் கீரை இலைகளை பிழிந்து சாறு எடுத்துக் காலையில் ஒரு ஸ்பூன் குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.


05.07.2018 - சுக்கை இடித்து பொடி செய்து சலித்து மதியம் ஒரு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.


04.07.2018 - சுக்கை இடித்து பொடி செய்து சலித்து மதியம் ஒரு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.


03.07.2018 - சுக்கை இடித்து பொடி செய்து சலித்து மதியம் ஒரு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.


02.07.2018 - உசிலை இலைப்பொடியை எண்ணெய் முழுக்கின்போது சிகைக்காய்க்கு பதிலாக பயன்படுத்த உடலில் உள்ள வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சியை உண்டாக்கும்.


30.06.2018 - மோரில் சிறிதளவு வெங்காயச்சாறு விட்டு குடிக்க இருமல் குறையும்.


29.06.2018 - இலந்தை மரத்தின் தளிரை ( இலையை) கொதிக்கவைத்து உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தால் தொண்டை புண், ஈறுகளில் இரத்தம் வடிதல் சரியாகும்.


28.06.2018 - வெந்தயக் கீரை, உலர்ந்த திராட்சை, சீரகம் சேர்த்து கஷாயமாக சாப்பிட இருமல் குறையும்.


27.06.2018 - பெருங்காயத் தூள், ஓமம், தேன் மூன்றையும் கலந்து சாப்பிட இருமல் குறையும்.


26.06.2018 - வாழை இலைகளை எடுத்து நன்றாக காய வைத்து எரித்து சாம்பலாக்கி 5 கிராம் அளவு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அதீத இருமல் குறையும்.


25.06.2018 - ஓமத்தை கறுக வறுத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.


24.06.2018 - உலர்ந்த திராட்சைகளை எடுத்து நீர் விட்டு அரைத்து அதனுடன் சர்க்கரை கலந்து சிறிது சூடுபடுத்தி சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.


23.06.2018 - பப்பாளிக்காயை சமைத்து உண்டு வர உடலின் எடை குறையும்.


22.06.2018 - மணத்தக்காளி இலை, ஏலக்காய், வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மண் சட்டியில் போட்டு சிவந்து வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.


21.06.2018 - ஓமத்தை கறுக வறுத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.


20.06.2018 - இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் கலந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும்.


19.06.2018 - கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும்.


18.06.2018 - இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீருடன் கலந்து வேகவைத்து பின் அதனை வடித்து விட்டு வடித்த சாறில் அரை கரண்டி கரும்பு சர்க்கரை சேர்த்து சூடாக குடிக்க இருமல் குறையும்.


17.06.2018 - ஊற வைத்த அவலை சாப்பிட உடல் எடை குறையும்.


16.06.2018 - சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் தொடர் இருமல் சரியாகும்.


15.06.2018 - மணத்தக்காளிக் கீரையை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து, அதில் எலுமிச்சம் பழம், சின்ன வெங்காயம் போட்டு சாறு எடுத்து காலை உணவுக்கு பிறகு சாப்பிட உடல் எடை குறையும்.


14.06.2018 - ஓமவல்லி இலை, காம்பு கசாயம் செய்து குடிக்க இருமல், சளி, காய்ச்சல் குணமாகும்.


13.06.2018 - வாழைப்பூவை எடுத்து நீர் விட்டு பூ மென்மையாக மாறும் வரை நன்றாக காய்ச்சி பிறகு நீரை வடிகட்டி நீக்கி விட்டு பூவை நன்றாக கசக்கி பிசைந்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குறையும்.


12.06.2018 - இலந்தை தளிர் இலை அரைத்து கஷாயம் செய்து சாப்பிட இரத்த பேதி சரியாகும்.


11.06.2018 - வாழைக்காயை பொடியாக நறுக்கி பொரியல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்.


10.06.2018 - வெங்காயத்தை உப்புடன் சேர்த்து உண்டு வர ரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாகும்.


09.06.2018 - பனை வெல்லம், சுண்ணாம்பு எடுத்து நன்கு பொடி செய்யவும். துணியை சுட்டு கரியாக்கிக் கொள்ளவும். இந்த மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு கலந்து வீக்கம், இரத்தக்கட்டு மேல் தடவிப் பற்று போட்டு வந்தால் அவை குறையும்.


08.06.2018 - இரத்த கொதிப்பு குறைய பச்சை அருகம்புல், மிளகு, சீரகம் அரைத்து, எலுமிச்சையளவு சாப்பிட்டு பால் குடிக்கவும்.


07.06.2018 - மஞ்சள், நெல் எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து கொதிக்க வைத்துப் பற்றுப் போட இரத்தக்கட்டு குறையும்.


06.06.2018 - நெல்லி வற்றல், பச்சைப்பயிறும் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி காலை, மாலை 100 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு குறையும்.


05.06.2018 - சுண்ணாம்பு, பனைவெல்லம் இவைகளை மைப்போல் அரைத்து இரத்தக்கட்டு உள்ள இடத்தில் தடவி வர இரத்தக்கட்டு குறையும்.


04.06.2018 - இரத்த கொதிப்பு இறங்க வெந்தயத்தை முன் தினமே ஊற வைத்து தயிரோடு அரைத்து தலைக்கு தேய்க்கவும்.


03.06.2018 - எலுமிச்சைப் பழச் சாறு, கற்றாழை இரண்டையும் இரும்பு சட்டியில் போட்டு காய்ச்சி மிதமான சூட்டில் இரத்தக்கட்டு உள்ள இடத்தில் தடவி வர இரத்தக்கட்டு குறையும்.


01.06.2018 - முழு வெந்தயம், பாசிபயறு, கோதுமை இவற்றை முதல்நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் காலை மிளகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து தோசை வார்த்து சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.


31.05.2018 - ஓமத்தை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் தேங்காய் எண்ணெயையும் கலந்து கொதிக்கும் போது கற்பூரத்தையும் சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் இடுப்பில் போட்டால் இடுப்பு வலி குறையும்.


30.05.2018 - கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்


28.05.2018 - வெந்தயக்கீரையை தேங்காய்த் துருவலோட நெய்யில வதக்கிச் சாப்பிட இடுப்பு வலி குறையும்.


27.05.2018 - பெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து காயத்தின் மீது தடவிவர இரணங்கள் ஆறும்.


26.05.2018 - வெந்தயத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை இவற்றை சேர்த்து பொடி செய்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.


25.05.2018 - கடுக்காய், மஞ்சள் மற்றும் வேப்பிலைகளை எடுத்து வெங்காயச்சாறு விட்டு நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும். இரவு படுப்பதற்கு முன் புண்கள் உள்ள இடத்தில் கனமாக பூச வேண்டும். காலையில் கடலை மாவை தலையில் தேய்த்து கால் மணி நேரம் கழித்து குளித்து தலையில் சிறிது கூட ஈரம் இல்லாமல் துடைத்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் இடுப்பில் உள்ள புண்கள் குறையும்.


24.05.2018 - கிராம்பை நீர் விட்டு அவித்து அந்த நீரை தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா குறையும்.


22.05.2018 - பொடுதலை இலை, வெள்ளைப் பூண்டு, மிளகு, சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவேண்டும். இவ்விதமாக 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு பிடிப்பு குறையும்.


21.05.2018 - முருங்கைக் கீரையை கொதிக்க வைத்து ஆறியதும் மிளகு தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து அருந்த ஆஸ்துமா குறையும்.


19.05.2018 - கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேனை கலந்து சாப்பிட்டு வர இடுப்பு மற்றும் மூட்டு வலி குணமாகும்.


17.05.2018 - கொள்ளு எடுத்து சிறிய குறும்பலாக அதை இடித்து 200 மி.லி தண்ணீர் விட்டு நீர் பாதியாக சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் அதிக சளி குறைந்து ஆஸ்துமா குறையும்.


16.05.2018 - நாட்டுக் கோழி (வீட்டில் வளர்க்கும் கோழி) முட்டையை தினமும் காலையில் பச்சையாக சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும்.


15.05.2018 - ஆஸ்துமா உள்ளவர்கள் தினமும் இரவு வறுத்த கொண்டைக்கடலை சிலவற்றை சாப்பிட்டு வெதுவெதுப்பான பால் குடித்து வந்தால் மிகவும் சிறந்தது.


14.05.2018 - வெண்டைக்காய் வேரை பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.


13.05.2018 - சுண்டைக்காயை உப்பு நீரில் ஊறவைத்து காய வைத்து வறுத்து சாப்பிட ஆஸ்துமா, மார்புச் சளி தீரும்.


12.05.2018 - எள்ளுப்பூவை பசும்பாலில் போட்டு காய்ச்சி சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.


29.04.2018 - கீழாநெல்லி இலைகளை அரைத்து உடம்பில் தேய்த்து குளித்து வர அரிப்பு, சிறுபுண்கள் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.


27.04.2018 - கருவேப்பில்லை 1 பிடி, கசகசா ஒரு கரண்டி, கஸ்தூரி மஞ்சள் 1 துண்டு சேர்த்து பூசி காயவிட்டு குளிக்க அம்மை தழும்பு நீங்கும்.


26.04.2018 - பாகல் இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து சாப்பிட்டு வந்தால் அடிக்கடி வரும் ஏப்பம் குறையும்.


25.04.2018 - ஆழம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணையில் குழைத்து தடவி வர அக்கி குணமாகும்.


23.04.2018 - எலுமிச்சம் பழச்சாறு, தேன் கலந்து குடிக்க இருமல், வரட்டு இருமல் குணமாகும்.


20.04.2018 - வெற்றிலையை சாறு எடுத்து அந்த சாற்றில் கிராம்பை அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.


19.04.2018 - முற்றிஇருமலால் தூக்கம் வராமல் இருந்தால் வெங்காயம் உப்பு தண்ணீரில் வேகவைத்து இரவு சாப்பிடுட்டு வந்தால் தூக்கம் வரும்.


17.04.2018 - முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.


16.04.2018 - வெங்காய சாறை கடுகு எண்ணையில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர வாத மூட்டு வலி குணமாகும்.


13.04.2018 - முழு வெந்தயம், பாசிபயறு, கோதுமை இவற்றை முதல்நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் காலை மிளகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து தோசை வார்த்து சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.


11.04.2018 - நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளித்து விழுங்க நாக்கு புண் குறையும்.


10.04.2018 - வெற்றிலை, வெங்காயம், சீரகம், பூண்டு பல் இவைகளை அரைத்து வடிகட்டி சாப்பிட்டு வர மாதவிடாயின் போது வரும் தீராத வயிற்று வலி குறையும்.


06.04.2018 - இரவு வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் அதில் உப்பு சேர்த்து குடிக்க வயிற்றுப்புண் குறையும்.


05.04.2018 - வேப்ப மரத்தின் துளிர் இலைகளை அரைத்து அதனுடன் வெங்காயம் சேர்த்து 3 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்றுவலி குறையும்.


04.04.2018 - நுங்கை தோல் உரிக்காமல் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும்


02.04.2018 - அல்சர் (வயிற்றுப்புண்) நோயாளிகளுக்கு வாய்நாற்றம் இருக்கும். இவர்கள் மணத்தக்காளி கீரை, சீரகம், வெங்காயம் சேர்த்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வேகவைத்து குடித்தால் அல்சரும் நீங்கும், வாய் துர்நாற்றமும் நீங்கும்.


01.04.2018 - கொய்யா இலைகளை இடித்து,மிளகு சேர்த்து, நீர் விட்டுக் காய்ச்சி குடித்து வந்தால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு குறையும்.


31.03.2018 - மாந்தளிரை மாதுளை இலையுடன் சேர்த்து அரைத்து ஒரு கிராம் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தால்அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அதனால் ஏற்படும் வயிற்றுக்கடுப்பு குறையும்.


30.03.2018 - வெற்றிலையை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி வர முகத்தில் காணப்படும் சொறிமற்றும் கருந்தேமல் குணமாகும்.


29.03.2018 - சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாக மாவிலங்க இலையை அரைத்து உள்ளங்கால்,மற்றும் கைகளில் பற்றுப் போட்டு வர எரிச்சல் குணமாகும்.


28.03.2018 - ஆரஞ்சுப் பழத்தோலை பொடியாக்கி தயிருடன் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விட முகச்சுருக்கம் நீங்கும்.


27.03.2018 - மருதாணி மனக்கோளாறுகள் வராமல் காக்கும் மிகச் சிறந்த மருந்து.குறைந்தது ஆண்டுக்கு 2 முறை கை மற்றும் கால்களில் மருதாணி இட்டு வரலாம்


26.03.2018 - தர்பூசணிப் பழத்தோலை அரைத்து முகத்தில் பூசிவைத்து 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவி விட முகச்சுருக்கம் நீங்கும்


25.03.2018 - மூட்டு எலும்புகளில் வலி குறைய பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுக்கு கால்பகுதி உப்பு, கால்பகுதி புளியும் சேர்த்து சுண்டவைத்து இளஞ்சூட்டுடன் வலி உள்ள இடத்தில் தடவ வலி குறையும்.


24.03.2018 - பருக்களின் மேல் துளசி சாறு பூசி வந்தால் முகப்பருக்கள் மறையும்.


21.03.2018 - மூட்டு வீக்கம் குறைய மூட்டுவலி குறைய விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சுப் பழச்சாற்றில் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.


20.03.2018 - முட்டை கோஸ், தக்காளி, கேரட் இவற்றை பச்சையாக சாப்பிட்டு வந்தால் பருக்கள் போகும்.


19.03.2018 - கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்துஅதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.


18.03.2018 - பாசிப்பயறு மாவு, எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவ முகப்பரு நீங்கும்


17.03.2018 - எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி மூட்டு வீக்கங்களீன் மீது வைத்து சிறிது நேரத்திற்கு கட்டி வைத்தால் வீக்கம் குறையும்.


16.03.2018 - வேப்ப இலையை பொடியாக்கி, நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, முகபருக்கள் குறையும்.


15.03.2018 - கடலை இலையை அவித்து இளஞ்சூட்டோடு மூட்டில் வைத்து கட்ட மூட்டு வலி குறையும்.


14.03.2018 - சுக்கை அரைத்து விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர முகப் பரு நீங்கி குணம் காணலாம்.


13.03.2018 - அத்தி இலையை அரைத்து மூட்டில் வைத்து கட்ட மூட்டு வலி குறையும்.


12.03.2018 - சீரகத்தை எருமைப்பால் விட்டு மைய அரைத்து தடவ முகப்பரு மறையும்.


11.03.2018 - சீரகத்தை எருமைப்பால் விட்டு மைய அரைத்து தடவ முகப்பரு மறையும்.


10.03.2018 - சூடான பாலில் ஏலக்காய் மஞ்சள் பொடி சேர்த்து இரவில் குடிக்க மூட்டு வலி குறையும்.


09.03.2018 - வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து போட முகப்பரு குறையும்.


08.03.2018 - மருதாணி இலைகளை அரைத்து மூட்டு வலி ஏற்பட்ட இடங்களில் தடவி வந்தால் மூட்டு வலி குறையும்.


07.03.2018 - சின்ன வெங்காயத்தை எடுத்து பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்.


06.03.2018 - கொய்யா இலைகளை நன்றாக விழுது போல அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பூசி வந்தால் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் குறையும்.


04.03.2018 - சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால் தோன்றிய தழும்புகள் குறையும்.


03.03.2018 - முருங்கை இலையை விளக்கெண்ணையில் வதக்கி வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வர மூட்டு வலி,இடுப்பு வலி,வாதவலி குறையும்.


01.03.2018 - வேப்ப எண்ணையில் விளக்கெண்ணை, தேங்காய் எண்ணெய் கலந்து சூடாக்கி தேய்க்க மூட்டு வலி குணமாகும்.


28.02.2018 - எலுமிச்சை சாறு, தக்காளிச் சாறு சேர்த்து தடவ கண்களுக்கு கீழ் கருவளையம் குறையும்.


27.02.2018 - வேப்பஇலை, ஓமம் இவைகளை அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக்கொள்வதால் மூக்கில் நீர் வடிதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


25.02.2018 - முளைகட்டிய பச்சை பயறு,சின்ன வெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட பருத்த கன்னம் பெறும்.


24.02.2018 - கேரட்டின் சாற்றோடு ஆரஞ்சுப் பழச்சாறு, பால் ஆகியவற்றைக் கலந்து பூசி வந்தால் முகத்தில் ஏற்பட்ட அம்மைத் தழும்புகள், சிறுப் புள்ளி ஆகியவைகள் குறையும்.


23.02.2018 - மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்பெண்ணையை கலந்து மைய அரைத்து புண்ணின் மீது தடவி வர மூக்கில் உள்ள புண் ஆறும்.


21.02.2018 - முகத்சுக்கு, கற்கண்டு வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து பொடி செய்து காலை, மாலை இரு வேளையும் 1 தேக்கரண்டி அளவு இளநீரில் கலந்து குடித்து வந்தால் மார்பு வலி மற்றும் மேல் மூச்சு வாங்குவது குறையும்.


19.02.2018 - முகத்தில் உள்ள முடிகள் அகல வேப்பங்கொழுந்து,குப்பைமேனி இலை, விரலி மஞ்சள் இவைகளை அரைத்து முகத்தில் பூசி காய வைத்து கழுவி வர வேண்டும்.


16.02.2018 - வெந்தயப் பொடி, கறி மஞ்சள் பொடி, பனங்கற்கண்டு பொடி இம்மூன்றையும் கலந்து பாலில் உண்டு வர பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும்.


15.02.2018 - பாலக்கீரை, சீரகம், பூண்டு ஆகியவற்றை அரைத்து சாப்பிட பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும்.


14.02.2018 - கருப்பு எள் மற்றும் நெருஞ்சி முள் ஆகிய இரண்டையும் எடுத்து தண்ணீரில் கலந்து ஊற வைத்து கொள்ளவும். தினமும் 2 முறை இந்த நீரை குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வெளிப்படாதது குறைந்து இயல்பான முறையில் இரத்தப்போக்கு ஏற்படும்.


13.02.2018 - வெங்காயம், தரைப்பசலைக் கீரை மற்றும் சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பழைய சோற்று நீரை விட்டு நன்கு மை போல அரைத்து சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு குறையும்.


12.02.2018 - புளியங்கொட்டையின் தோலைத் தட்டி எடுத்து விட்டு கொட்டையை நன்கு காய வைத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு சூரிய உதயத்திற்கு முன்னதாக பசுமோரில் கலந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குறையும்.


11.02.2018 - இலவம் பிஞ்சும்,கொழுந்தையும் புளிப்பு தயிரில் ஊறவைத்து காலையில் சாறு பிழிந்து குடிக்க அதிக இரத்தப் போக்கு குறையும்.


10.02.2018 - தொட்டாற்சுருங்கி இலைகளை சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து பசு மோரில் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு குறையும்.


09.02.2018 - முருங்கை இலை, கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் பேறுகால வலி குறையும்.


06.02.2018 - உடல் சோர்வு நீங்கி பலம் பெற கோதுமை கஞ்சியை மாதவிடாய் காலங்களில் குடித்துவரலாம்.


05.02.2018 - நாவல் மரப்பட்டைத் தூளை மோரில் குடிக்க, பெண்களுக்கு இரத்தப் போக்கு குறையும்.


04.02.2018 - இடுப்பு வலி குணமாக வெள்ளைப்பூண்டை கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும்.


03.02.2018 - சிறு கண் பீளை இலையை சாறு மூன்று வேளை அருந்தி வர பெண்களுக்கு மாதவிலக்கின் அதிக இரத்தப் போக்கு குறையும்.


02.02.2018 - பாகல் இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து சாப்பிட்டு வந்தால் அடிக்கடி வரும் ஏப்பம் குறையும்.


01.02.2018 - ஆடாதோடை இலை, வேர் வகைக்கு அரைக் கைப்பிடி அளவு எடுத்து நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி கொடுத்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.


31.01.2018 - முருங்கை பட்டை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சாறு எடுத்து குடிக்க நெஞ்சு எரிச்சல் குறையும்.


30.01.2018 - சீரகத்தை அரைத்து எருமை வெண்ணெயில் கலந்து கொடுக்க ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
தொடர்ந்து வாந்தி ஏற்படும் போது ஆப்பிள் பழச்சாறு எடுத்து அதில் சுக்குத்தூள் கலந்து நீர் ஊற்றி குடித்து வந்தால் வாந்தி குறையும்.


26.01.2018 - தேங்காய் பூவை வதக்கி மார்பில் கட்டிவர தாய்ப்பால் சுரப்பது நிற்கும்.


25.01.2018 - அதிகமாக குமட்டும் போது வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் வினிகர் கலந்து குடித்து வந்தால் குமட்டுதல் குறையும்.


24.01.2018 - பாகற்காயின் இலைகளை அரைத்து பெண்களின் மார்பகங்களில் பற்றுப்போட்டு வர பால் அதிகம் சுரக்கும்.


23.01.2018 - பொதுவாக எல்லா வகையான விஷமும் குறைய நாட்டுத்தக்காளி இலை, மணத்தக்காளி இலை இரண்டையும் எடுத்து இடித்துச் சாறு பிழிந்து 200மில்லி சாற்றை சாப்பிட்டு வந்தால் விஷம் குறையும்.


22.01.2018 - ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி ஒத்தடம் ஒத்தடம் கொடுப்பதால் தாய்ப்பால் கட்டிகொள்வதால் ஏற்படும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


21.01.2018 - துளசி இதழ்களை கசக்கி விஷ வண்டுகள் கொட்டின அந்த இடத்தில் தேய்த்தால் விஷம் முறிந்து வலி குறையும்.


20.01.2018 - சீரகத்தை வறுத்து பொடி செய்து அதனுடன் சம அளவு வெல்லம் கலந்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.


19.01.2018 - முருங்கை இலையை அரைத்து பற்றுப்போட கம்பளிப் பூச்சி கடித்த இடத்தில் அரிப்பு குறையும்.



13.01.2018 - கம்பளிப் பூச்சியின் உரோமம் பட்ட இடத்தில் நல்லெண்ணெயை தேய்க்க அரிப்பு குறையும்.


12.01.2018 - நான்கு கைப்பிடி வேப்பிலை, ஒரு பிடி உப்பு ஆகியவற்றை ஒரு சட்டியில் போட்டு கருக்கித் தூள் செய்து பற்பொடியாக பயன்படுத்தினால் பல் ஈறு உபாதை குறையும்.


11.01.2018 - சிறிது புளியை எடுத்து அதனுடன் சம அளவு சுண்ணாம்பு சேர்த்து உள்ளங்கையில் வைத்து கசக்க சூடு ஏற்படும் அதிக சூடு ஏற்பட்டவுடன் அதை எடுத்து தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் பிடித்துக் கொள்ளும். உடனே சிறிது தேங்காயை மென்று சாப்பிட்டு வந்தால் தேள் கொட்டிய விஷம், கடுப்பு குறையும்.


10.01.2018 - மிளகுத் தூளும் உப்பும் கலந்து பல்துலக்கி வர பல் கூச்சம் குறையும்.


09.01.2018 - கைப்பிடி அளவு தும்பை இலைகளை எடுத்து அதனுடன் 4 மிளகு வைத்து நன்கு அரைத்து சாப்பிட்டு வந்தால் தேள், செய்யான் போன்றவை கடித்த விஷம் குறையும்.


08.01.2018 - இஞ்சி சாறுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தால் சொத்தைப்பல் குறையும்.


07.01.2018 - செம்பருத்தி இலைகளை அரைத்து சாறு எடுத்து காலையில் மட்டும் குடித்து வந்தால் விஷப்பூச்சிகள், வண்டுகள் கடித்த வீக்கம், அதன் விஷம் ஆகியவை குறையும்.


06.01.2018 - சின்ன வெங்காயச்சாறு, இஞ்சிச்சாறு, தேன் இம்மூன்றையும் கலந்து சாப்பிட ஜலதோஷம், இருமல் குறையும்.


05.01.2018 - நாய், பூனை, எலி போன்றவை கடித்தால் உடனே வெங்காயத்தையும், உப்பையும் அரைத்து கடிப்பட்ட இடத்தில் தடவி வந்தால் விஷம் குறையும்.


04.01.2018 - சீரகத்தை பொன் வருவலாக வறுத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ஜலதோஷம், இருமல் குணமாகும்.


03.01.2018 - மிளகாய் தூளுடன் கடுகு எண்ணெய் கலந்து நாய், பூனை போன்றவை கடித்த இடத்தில் தடவி வந்தால் அவற்றின் விஷம் குறையும்.


02.01.2018 - பழம்புளியை அரைத்து உள்நாக்கில் தடவி வர உள்நாக்கு சதை வளருவதை தடுக்கலாம்.


01.01.2018 - தேள் கொட்டினால் உடனே புளியை கரைத்து சிறிது குடித்து விட்டு தேள் கொட்டிய இடத்திலும் புளியை தடவி வந்தால் விஷம் குறையும்.


31.12.2017 - முருங்கைபட்டையை அவித்து சாறு எடுத்து ரசமாக செய்து குடித்து வந்தால் காக்காய் வலிப்பில் இருந்து குணம் காணலாம்.


30.12.2017 - வெள்வேலம் பட்டையை பசு மோர் விட்டு இடித்து சாறு பிழிந்து 100 மி.லி சாற்றை குடித்து வந்தால் நகத்தால் ஏற்படும் விஷம் குறையும்.


28.12.2017 - நாட்டுத்தக்காளி இலைச் சாறு, மணத்தக்காளி இலைச் சாறு 200 மி.லி சாப்பிட்டால் பூச்சிகளின் விஷம் குறையும்.


27.12.2017 - நரம்பு சிலந்தி குணமாக வேப்பம்பூ,வேப்ப விதை இவைகளை அரைத்து கட்ட சரியாகும்.


26.12.2017 - 20 மிளகை எடுத்து தேங்காயுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட்டு வந்தால் தேள்கடி விஷம் குறையும்.


25.12.2017 - சொத்தை நகம் சரியாக நொச்சி இலை 50 கிராம், மருதாணி இலை 50 கிராம்,எருக்கம்பூ 2 இவைகளை சேர்த்து அரைத்து கட்டிவந்தால் சரியாகிவிடும்.


24.12.2017 - வெற்றிலை, மிளகு இவைகளை சேர்த்து அரைத்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வர நாள்பட்ட விஷக்கடியின் விஷத்தன்மை நீங்கி குணமாகும்.


22.12.2017 - பழைய புளி, சுண்ணாம்பு இவைகளை சேர்த்து பிசைந்து தேனீ கொட்டிய இடத்தில் பூச வேண்டும். இவ்வாறு செய்வதால் தேனீ கொட்டிய கடுப்பு நீங்கி குணமாகும்.


21.12.2017 - வெற்றிலையை கடிவாயில் வைத்து அழுத்தி தேய்க்க கம்பளி பூச்சிக்கடிக்கு நல்ல மருந்து.


20.12.2017 - சாதத்துடன், உப்பு, வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து வெற்றிலையில் வைத்துக்கட்ட நகச்சுற்று குறையும்.


19.12.2017 - இன்றைய மூலிகை சேகரிப்பு கரிசலாங்கண்ணி.


18.12.2017 - வெள்ளைபூடை அரைத்து கடிவாயில் கட்ட வண்டு, பூச்சிகடிகளின் விஷம் முறியும்.


15.12.2017 - இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழமையான பாரம்பரியம் மிக்க கோவில்களை தரிசனம் செய்ய சென்ற போது காஞ்சி குடில் சென்றேன்.


13.12.2017 - ஒரு கிண்ணம் அளவு தயிரை எடுத்து ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு மெதுவாக சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.


11.12.2017 - வெள்ளைப் பூண்டையும், சுண்ணாம்பையும் எடுத்து அரைத்து ஊமை காயத்தின் மேல் போடலாம்.


10.12.2017 - மூன்று வெற்றிலையை எடுத்து ஒவ்வொன்றிலும் மூன்று மிளகுகள் வீதம் வைத்து வெற்றிலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் வண்டுக் கடித்த விஷம் குறையும்.


09.12.2017 - கசகசா, மஞ்சள், கறிவேப்பிலை மூன்றையும் அரைத்து தழும்பு உள்ள இடத்தில் தடவி வர அம்மை தழும்பு குறையும்.


07.12.2017 - இஞ்சியை சுத்தப்படுத்தி நன்றாக அரைத்து சாறு பிழிந்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் விட்டு வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மேலுள்ள தெளிந்த சாறை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு திப்பிலி மற்றும் கடுக்காயை மைபோல விழுதாக அரைத்துக் கொள்ளவும். சாறையும், விழுதையும் கலந்து குடித்து வந்தால் விக்கல் குறையும்.


நண்பர்களே! வணக்கம். நான் வருகிற (December 09 முதல் 13 ம் தேதி வரை ) சென்னையில் இருப்பதால் என்னுடன் மருத்துவ ஆலோசனை பெற விரும்புவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
“வைத்திய ரத்னா”
டாக்டர்.இரா.கணபதி B.E.,M.B.A.,RSMP.,RMP (siddha).,DCSM
மத்திய மாநில அரசிதழில் பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
தொடர்புக்கு – 99439 09495.


06.12.2017 - வெள்ளரிக்காய், மஞ்சள்,வேப்பம்பூ இவற்றை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர உடல் சிவப்பு நிறம் பெறும்.


05.12.2017 - இலந்தை தளிரை கொதிக்க வைத்து உப்பு இட்டு வாய் கொப்பளித்து வர தொண்டை புண், ஈறுகளில் ரத்தம் வருதல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.


04.12.2017 - தும்பை பூ தைலம் காய்ச்ச தும்பை பூக்களை இன்று சேகரித்து... இந்த தைலம் மூக்கில் சதையடைப்பு, தும்மல், பீனிசம், தலைவலி, தலையில் நீர்க்கோர்வை ஆகியவைக்கு தலையில் தைலத்தை தேய்த்து ஊற வைத்து சுடுநீரில் தினமும் குளிக்க தீரும்.


03.12.2017 - இந்திய பாரம்பரிய மருத்துவர்கள் சங்கத்தின் மாநில இணைப் பொது செயலாளர் நியமனம் **********02.12.2017 ந்தேதி காலை 10 மணி அளவில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இந்திய பாரம்பரிய மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூடியது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். என்னை மாநில இணைப் பொது செயலாளர் ஆக தேர்வு செய்த மாநில செயற்குழுவிற்கும் மாநில பொது செயலாளர் டாக்டர். தேவசகாயம் அவர்களுக்கும் நன்றி. இப்படிக்கு டாக்டர். இரா.கணபதி. பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம். தாராபுரம்.


02.12.2017 - முருங்கை இலையை சாப்பிட தாய் பால் சுரப்பு அதிகரிக்கும்.


01.12.2017 - ஒரு தேக்கரண்டி அளவு சோம்பை எடுத்து அதில் 250 மில்லி தண்ணீர் விட்டு நன்கு மூடி வைத்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு பால் மற்றும் தேன் கலந்து படுக்க போகும் முன் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.


01.12.2017 - நண்பர்களே! வணக்கம்.நான் வருகிற (December 09 முதல் 13 ம் தேதி வரை ) சென்னையில் இருப்பதால் என்னுடன் மருத்துவ ஆலோசனை பெற விரும்புவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
“வைத்திய ரத்னா”
டாக்டர்.இரா.கணபதி B.E.,M.B.A.,RSMP.,RMP (siddha).,DCSM
மத்திய மாநில அரசிதழில் பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
தொடர்புக்கு – 99439 09495.


30.11.2017 - தாய்ப்பால் சரிவர அருந்தாத குழந்தைகளுக்கு துளசி, அதிமதுரம் ஆகியவற்றை வெந்நீர் கொண்டு சந்தனம்போல் அரைத்து தாயின் மார்பகத்தில் தடவினால் குழந்தைகள் பால் அருந்தும்


29.11.2017 - 1 டம்ளர் வெது வெதுப்பான பாலை எடுத்து அதனுடன் சிறிது இலவங்கப்பட்டை பொடி மற்றும் 1 தேக்கரண்டி தேன் கலந்து இரவில் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.


வித்துவேஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்
அஷ்ட கர்மங்களில் ஆறாவது கர்மமாக சொல்லப்படுவது வித்துவேஷணமாகும். வித்துவேஷணம் என்பது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கி பிரிப்பது இதனால் எப்படிப்பட்டவரையும் பிரித்து விடலாம். எது தனக்கு வேண்டாததோ அது தானாகத்தன்மேல் வெறுப்புற்று தன்னைவிட்டு ஓடிவிடும்படி செய்வதே வித்துவேஷணமாகும். அதைப்பற்றி இன்றைய பதிவில் காண்போம். வித்துவேஷணம் எட்டு உட்பிரிவுகளைக்கொண்டதாகும், அவை
1)சர்வ வித்துவேஷணம்
2)இராஜ வித்துவேஷணம்
3)புருச வித்துவேஷணம்
4)ஸ்திரி வித்துவேஷணம்
5)மிருக வித்துவேஷணம்
6)தேவ வித்துவேஷணம்
7) லோக வித்துவேஷணம் என்பனவாகும்.
வித்துவேஷணத்தின் அதிதேவதை வாயு தேவன் ஆவார்.
வித்துவேஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்
பாசமுடன் வித்துவேஷணத்தைக்கேளு பதிவான மந்திரமிது சுத்தவித்தை வாசமுள்ள வித்தையடா நேசமான மந்திரமிது ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும் சர்வயிந்திராணிபகவதே சுவாகாவென்னே எண்ணமுடன் மந்திரத்தை செபிக்குமார்க்கம் இன்பமுடன் விபூதியிலே முக்கோணமிட்டு கண்ணிறைந்த முக்கோண நடுவே விந்து கருணைவளர் விந்துநடு ஓங்காரஞ்சாத்தி முன்னிறைந்த ஓங்கார நடுவிலேதான் முத்தியுடன் சுத்தமதாய் சிங்கென்றிட்டு சன்னதியை நோக்கிமனத் தன்மையாலே சங்கையுடன் மானதமாய்ப் பூசைசெய்யே.
செய்யடா மானதமாய்ப் பூசைபண்ண சிந்தைமன தொன்றாக சிவனைநோக்கி மெய்யடா மந்திரமிது தினம்நூறப்பா விரும்பிமன மொன்றாக உருவேசெய்தால் அய்யனே வித்துவேஷணந்தானெட்டும் அரகரா தன்வசமா யடங்கியாடும் மய்யமென்ற சுழிமுனையிலே அடங்கியாட வரிசையிடனினைத்தபடி வாய்க்குந்தானே.
-அகத்தியர் பரிபூரணம்1200
பொருள்:
ஒரு செய்வாய் கிழமை நாளில் உடல்மனசுத்தியுடன் சாம்பல்நிற பட்டாடை உடுத்தி எட்டிபலகையில் வடமேற்கு திசை நோக்கி அமர்ந்துகொண்டு உன் எதிரில் ஒரு எட்டிப்பலகையை வைத்து அதில் விபூதியை பரப்பி அவ்விபூதியில் முக்கோணம் போட்டு அம்முக்கோணத்தின் நடுவில் ஓம் என்று எழுதி அதனுள் சிங் என்று எழுதவும். பின்னர் பன்றி நெய் ஊற்றி விளக்கேற்றி வைத்து அதைச்சுற்றிலும் காக்கணம் மலர்களையும் ஏனைய பூசைப்பொருட்களையும் வைத்துக்கொண்டு மனஓர்நிலைப்பாட்டோடு "ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும் சர்வயிந்திராணிபகவதே சுவாகா" என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு 100 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் வித்துவேஷணம் எட்டுக்கும் சித்தியாகும்.
பின்னர் இதை பயன்படுத்தவேண்டுமென்றால் உன் மூச்சை உள்நிறுத்தி இம்மந்திரத்தை 3 முறைசெபித்தால் உன் வழியில் குறுகிடும் அதிகார பலமுள்ளவர்கள், எதிரிகள், மிருகங்கள்,ஆண்கள், பெண்கள், பேய் பிசாசு, துஷ்ட தேவதைகள், ஜீவஜந்துக்கள் என அனைத்தும் உன்னை கண்ட மாத்திரத்தில் மிரண்டு ஓடிவிடும். அது மதம் பிடித்த யானையாக இருந்தாலும், முரட்டு காளையாக இருந்தாலும் ஓடுவிடும். பிறர்க்கு இது பயன்படுவதற்கு முன்சொன்ன முறையில் மந்திரத்தை கையில் விபூதியை வைத்து செபித்து அவர்களுக்கு அவ்விபூதியை பூசிக்கொள்ளும்படி கொடுக்கலாம். அவர்கள் அதை வயல்வெளியில் போட்டால் அங்கு எலிகள் வாராது. பிணியாளர்க்கு பூசினால் பிணி ீர்ந்துவிடும். இன்னும் பல பயன்கள் இதில் அடங்கியுள்ளன.


28.11.2017 - கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி கொடுக்க தாய்ப்பால் சுரக்கும்.


27.11.2017 - வெங்காயத்தை தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.


26.11.2017 - பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் பற்றுப் போட்டு வந்தால் தாய்பால் அதிகம் சுரக்கும்.


24.11.2017 - வெள்ளைப்பூண்டு அரைத்து எலுமிச்சை பழச்சாறில் கலந்து தலையில் தேய்த்து சிறிது ஊறிய பின் குளிக்க பேன் தொல்லை நீங்கும்.


23.11.2017 - அரைக் கீரையை சுத்தம் செய்து சமைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் அளவுக்கு அதிகமாக சிறுநீர் பிரிவது குறையும்.


01.11.2017 - வசம்பு, மஞ்சள், சுக்கு, சித்தரத்தை எடுத்துப் பொடித்து வெற்றிலை சாறில் அரைத்து இளம் சூடாக்கி காலில் பூச கணுக்கால் கட்டி குறையும்.


அச்சம் வேண்டாம் எல்லா நோய்க்கும் தீர்வு உண்டு சித்தர்கள் மருத்துவத்தில்…….
ஆண்குறி நோய்களும் அறிகுறிகளும்
2) பித்த ஆண்குறி நோய்.
இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.ஆண்குறி சிவந்து காணும்.
2.குறி வீக்கத்துடன், கடுப்பு, காய்ச்சல் தோன்றும்,
3.உடலுறவில் மிகுந்த ஆசை எழும்,
4.இந்நோய் மாறுவது கடினம்.
மருந்துகள் செய்து கொடுத்தாலும் இந்த நோய் தீருவது கடினம். சில் விஷம் போல் உடலில் உணர்வு தோன்றும்.





02.11.2017 - உடலில் எந்த ஒரு பாகத்திலாவது சுளுக்கு, வலி, வீக்கம் ஆகியன ஏற்பட்டால், பூண்டை உரித்து, அதன் சாற்றைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து நன்கு தேய்த்தால் மேற்குறித்தவை நீங்கும்.




03.11.2017 - வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி தணலில் காட்டி சூட்டோடு காலில் முள் குத்திய இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்




04.11.2017 - முருங்கைப்பட்டை, சுக்கு, பெருங்காயம், கடுகு முதலியவற்றை அரைத்து சூடாக்கி இளஞ்சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் பற்றுப்போட சுளுக்கு குறையும்.



05.11.2017 - கடுகு ரோகிணி , கொடிவேலி, மரமஞ்சள் இரத்த நாளங்களில் அடைப்பு எடுக்க மருந்து தயாரித்த போது...



06.11.2017 - வெள்ளைப்பூண்டு, உப்பு இரண்டையும் சேர்த்து இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவ சுளுக்கினால் ஏற்பட்ட வலி குறையும்.



07.11.2017 - நொச்சி இலையை வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி லேசான சூட்டில் முழங்காலில் தடவினால் முழங்கால் வலி குறையும்.


தோப்புக்கரணம் கல்வி கற்பதில் கண்கள், கைகள், காதுகள், மூளை ஆகிய நான்கு உறுப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் கண்கள் வாசிக்கும் திறனையும், கைகள் எழுதும் திறனையும், காதுகள் கேட்கும் (செவி சாய்க்கும்) திறனையும், மூளை நினைவாற்றல் மற்றும் பகுத்தறியும் திறனை பெற்றுள்ளன. கற்பிப்பவர்கள், கைகள், வாய், மூளை ஆகிய மூவுறுப்புகளை பயன்படுத்துகின்றனர். கற்பவர்கள் கண்கள், கைகள், காதுகள், மூளை ஆகிய நான்கு உறுப்புகளைப் பயன்படுத்துகின்றனர். புத்தகங்களை கண்களின் துணையோடு வாசித்து கற்கலாம் என்றாலும் நீண்ட நேரம் வாசித்தால் கண்கள் களைப்படைந்து விடும். ஆனால் கேட்பது மிகவும் எளிது. இதன் காரணத்தினாலேயே பள்ளி,கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டாலும். ஒரு ஆசிரியர் பாடங்களை நடத்தியதை காதில் வாங்கிக்கொண்டு பிறகு புத்தகங்களை வாசிப்பது எளிதாக அமைகிறது. ஆனால் ஆசிரியர் பாடம் நடத்தும்போது காது கொடுத்து கேட்காத மாணவர்களால் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. பாடங்களை வாசிக்கும்போதும் சில மாணவர்களுக்கு கவனக்குறைவு ஏற்படுகிறது. இப்படி கவனக்குறைவாக உள்ள மாணவர்களை 10 முறை, 20 முறை பாடங்களை எழுதிக்கொண்டு வருமாறு ஆசிரியர்கள் கூறுவர். இதனால் என்ன ஆகிறது என்றால் ஒரு வார்த்தை கூட விடாமல் திரும்ப திரும்ப எழுதுவதால் அந்த பாடம் எளிதில் மனதில் தங்குகிறது.அதிக நேரம் பேனா பிடித்து எழுதுவதால் அது ஒரு நுண்ணழுத்த சிகிச்சையாக அமைந்து மூளையை திறம்பட செயல்பட வைக்கிறது. கவனக்குறைவுள்ள மாணவர்கள் தினமும் 10 முறை தோப்புக்கரணம் போட்டு பழகி வந்தால், கண், காது, மூளை, கைகள் நான்கும் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பிக்கும். இதன் மூலம் உரிய நரம்புகள் தூண்டப்பட்டு வாசிக்கும் திறன், கேட்கும் திறன், விரைவாக எழுதும் திறன், நினைவாற்றல் முதலியவை அதிகரிக்கும்.


08.11.2017 - சம அளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் எடுத்து நன்றாக கலந்து சுளுக்கு இருக்கும் இடத்தில் சிறிது விட்டு நன்கு தடவி விட்டு வந்தால் சுளுக்கு குறையும்.
காமத்தை வெல்வது எப்படி?
இன்றைய கால கட்டத்தில் கடவுளை நெருங்க விடாமல்..நம்மை உலக இச்சையின் பக்கம் இழுத்துக்கொண்டு போகும் மிகப்பெரிய ராவணின் அஸ்திரம்.யுத்தத்தில் லக்ஷ்மனை மூர்ச்சை இழக்க செய்த நாக அஸ்திரம் இதுதான்.விகாரங்களில் மிகப்பெரிய அஸ்திரம் காமம்.இதனால்தான்தெய்வங்களில் அவர்களின் தலைக்கு பின்னாலோ,காலுக்கு அருகிலோ காமம் என்ற பாம்பை வென்றதன் அடையாளமாக மிகப் பெரிய விஷப்பாம்பை காண்பித்து உள்ளனர்.. இந்தகாமம் என்பது மனதில் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ, விதைத்துள்ள இச்சையின் விதை..இதை ஆரம்பத்தில் நாம் நீக்காவிட்டால் இது நம்மை மூர்ச்சை இழக்க செய்துவிடும்.. மூர்ச்சை என்றால் நாம் என்ன செய்கின்றோம், என்ன பேசுகின்றோம் என்பதே தெரியாத நிலை.. இதனால்தான் காமம் மகா சத்ரு என்று கீதை சொல்கின்றது..கடவுளின் அருகில் செல்ல வேண்டுமானால் ஒருவர் முதலில் காமத்தை விடவேண்டும் என்று சொல்லப்படுகின்றது, உண்மையில் காமத்தை வெல்வது எளிது.. ஆனால், எப்பொழுதும் நம்முடைய மனதை பிஸியாக வைத்துக் கொள்பவருக்கே இது சாத்தியம்..ஏதாவது ஒரு ஆன்மீக பயிற்சியில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளவேண்டும்.எங்கே காமம் உற்பத்தி ஆகின்றதோ முதலிலேயே எச்சரிக்கையாகி மனதை அதிலிருந்து விலக்க வேண்டும்..காமத்தை பஸ்மம் ஆக்கும் பரமாத்மா ஜோதியான தந்தை சிவபெருமான் மீது மனதை செலுத்தவேண்டும்..மன்மதனின் காமபாணம் சிவபெருமானிடம் செல்லுபடி ஆகவில்லை.. எனவே, மனம் இறைவன் மீது ஈடுபட நம்முடைய மனம் சுத்தமடைய வேண்டும்.முதலில் நம்முடைய கண்கள் எதிலாவது மூழ்கும் பொழுது அங்கேதான் காமம் உற்பத்தி ஆகின்றது..கண்கள் பார்த்து மனதிற்கு கொண்டு செல்லும்பொழுது அங்கே இச்சை உற்பத்தி ஆகின்றது.அந்த இச்சையின் சிறிய விதை பெரிய காமத்தின் விஷ விருட்ஷமாக வளர்ந்துவிடும்..அதில் உட்காரும் ஆசை என்னும் குரங்கு..ஒவ்வொரு கிளையாக தாவி விளையாட ஆரம்பிக்கும், கண்டிப்பாக ஒரே கிளையில் அமராது.. ஒன்றை பார்க்க இன்னொரு கிளை அதற்க்கு அழகாக தோன்றும்..காமம் ஒருவருக்குள் வந்து விட்டால்..அவர் காலப்போக்கில் எல்லோர் மீதும் அதை செலுத்த ஆரம்பித்து விடுவார்.. அதற்காக அவர் பல காரணங்களை சொல்வார்.. எங்கே காரணம் இல்லையோ, அங்கேதான் நிவாரணம்.. ஒருவரின்தேகத்தின் மீது பார்வை செல்லும் ஒருவருக்கு காமம் உற்பத்தி ஆகும்..உங்கள் கண்கள் எதிலும் மூழ்க கூடாது.எதில் உங்கள் கண்கள் நிலை பெருகின்றதோ அதனுடைய காட்சி உங்களை அறியாமல் உங்களிடம் நாள் முழுவதும் தென்பட்டுக்கொண்டே இருக்கும்.. எனவே, இறைவனின் கட்டளை உன்னை உடல்
என்று உணராமல், நெற்றியின் மத்தியில் ஆன்மா என்றே உணர்ந்துகொள்..பிறரையும் அப்படியே பார்க்க பழகு..பிறகு தேகத்தின் கவர்ச்சி ஒன்றும் செய்யாது..இந்த உலகில் ராமனை போன்ற ஒரு சிலரே உள்ளனர். ராவணை போன்ற அநேகர் உள்ளனர். காரணம் இது ராவண ராஜ்ஜியம்..ராம ராஜ்யம் அல்ல.. ராவணின் காமம், கோபம், அகங்காரம், பற்று, பேராசை என்னும் ஆயுதங்களில் முதல் ஆயுதம் காமம்..இதை வெல்லவேண்டும் என்பதற்காக ரிஷிகள், முனிகள் வீட்டை விட்டு காட்டுக்கு சென்றார்கள், ஆனால் இறைவன் சிவபெருமானின் வாக்கு இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர்போல பற்றற்று அன்புடன் ஆத்ம அபிமானத்துடன் இருந்து மனதை ஜோதியான என்னிடம் செலுத்து என்பதே ஆகும்..பெரிய..பெரிய.. மன்னர்கள் கூட தன்னுடைய ராஜ்ஜியத்தை காமத்தினால் இழந்தனர்.ஒரு காமம் வாழ்க்கையில் சத்திய நாசம் செய்துவிடும்.. காமம் உள்ளுக்குள் வந்துவிட்டால் அவன் பலவிதங்களில் பொய் பேச ஆரம்பித்து விடுவான்,அவன் காமத்தை நல்லது என்று அதன் பக்கம் பேசுவான்..இன்று இந்த உலகம் பொய்யாக மாறியதற்கு முக்கிய காரணம் காமம்..இந்த உடலும் பொய்..இந்த உலகமும் பொய்..இல்லற தர்மத்தை இறைவனுடைய வழியில் மீறாமல் இருப்பதே புருஷ லட்சணம்.. சத்தியவானை மீட்ட சாவித்திரியின் லட்சணம்.. ஆபாசத்தை பார்ப்பவர் ஒன்றோடு நிறுத்துவது இல்லை மேலும், மேலும், பார்த்துக்கொண்டே இருப்பார் இதை பார்க்கும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களுக்குள் ஒழுக்கமான கணவன் மனைவியாக கண்டிப்பாக வாழ முடியாது.. இவ்வளவு விவாகரத்து வழக்குகளுக்கும் காமமே கதாநாயகன்.. காமத்தினால் நிரந்தர சந்தோசப்பட்டவன் ஒருவனுமில்லை..ரிஷிகள் கூட காக்கையின் மலத்திற்கு சமமான சுகம் என்றே சொல்கின்றனர்..எனவே, மனதை சுத்த எண்ணங்களில் நிரப்பி ஜோதியான பரம் பொருள் சிவபெருமானை நினைத்து அவரை மகிழ்வுற செய்வோம்..கடவுளே மகிழ்ந்து விட்டால் வேறென்ன வேண்டும் உங்கள் வாழ்விலே..


09.11.2017 - இஞ்சி சாருடன் தேன் கலந்து குடிக்க கை மற்றும் கால் நடுக்கம் குறையும்.


10.11.2017 - முட்டைகோஸின் வெளிப்புறத்தில் இருக்கும் கடின பகுதியை உரித்து நீர் விட்டு மென்மையாக மாறும் அளவுக்கு நன்றாக காய்ச்சி பிறகு அந்த முட்டைகோஸை எடுத்து பருத்தி துணியில் வைத்து சுளுக்கு இருக்கும் இடத்தில் 3 மணி நேரம் கட்டி வந்தால் சுளுக்கு குறையும்.
வீட்டில் பல்லி ஒலி எழுப்புவதைத் தமக்கு ஏற்படப் போகும் நன்மை தீமைக்கான அறிகுறியாகும்
ஒரு சொல் சொன்னால் துன்பம்.
இரண்டு சொல் சொன்னால் தனலாபம்.
மூன்று சொல் சொன்னால் மரணம்.
நான்கு சொல் சொன்னால் சௌக்கியம்.
ஐந்து சொல் சொன்னால் உறவினர் வருகை.
ஆறு சொல் சொன்னால் பீடை.
ஏழு, எட்டு சொல் சொன்னால் அகமலிவு.
பல்லி எந்த திசையில் இருந்து சொல்கிறதோ அதற்கு ஏற்ப பலன்கள் உண்டு.
வடக்கு திசை : சுபச்செய்தி வரும்.
தெற்கு திசை : எதிர்பாராத சுக சவுகரியங்களையும், எதிர்பாராத அதிர்ஷடத்தையும் அளிக்கும்.
கிழக்கு திசை : உடனடியாக ஏதோ ஒரு கெடுதல் நடப்பதாக அர்த்தம்.
மேற்கு திசை : சஞ்சலமான சோதனைகளும், சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கான எச்சரிக்கையாகும்.
தென்கிழக்கு திசை : உடனடியாக கலகம் வரும்.
தென்மேற்கு திசை : உறவினர்கள் வருகைதருவார்கள்.
மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். சுயமனையில் வலத்திலும், வாசலிலும் உச்சத்திலும் சொன்னால் பண வரவு உண்டாகும்.


11.11.2017 - வெந்தயம், சீரகம், வெங்காயம், வில்வப்பழத்து உள் தோல் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து இளம் வறுப்பாக வறுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் கைகால் வீக்கம், உடல் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.
அச்சம் வேண்டாம் எல்லா நோய்க்கும் தீர்வு உண்டு சித்தர்கள் மருத்துவத்தில்…….
ஆண்குறி நோய்களும் அறிகுறிகளும்
3) சிலேத்தும ஆண்குறி.
இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.ஆண்குறி தடித்து கனத்து மினு மினுப்புடன் வீங்கி காணும்.
2.விதைப் பைகள் வீக்கத்துடன் காணும்,
3.ஊரல், சொறி ஏற்படுவதுடன் இருமல் காணும்.
4.வயிறு பொருமல், பரு, பிளவை எழும்.
5.உடலில் விஷம் ஏறினால் போல பல குணங்களை காட்டும்.



12.11.2017 - மருதோன்றி இலை, மிளகு, பூண்டு, மஞ்சள் இவைகளை அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் நமைச்சல் நீங்கி சுகம் காணலாம்.

கொத்து, வீச்சு, சில்லி... பரோட்டா பிரியர்களே... சிறுநீரகம், கல்லீரல் கவனம்!
`பரோட்டா’, `புரோட்டா’, வட இந்தியாவில் `பராத்தா’, மொரீஷியஸில் `ஃபராட்டா’, மியான்மரில் `பலாட்டா’... எப்படி அழைக்கப்பட்டாலும், இது இந்தியர்களை வசீகரிக்கும் ஓர் உணவு. முக்கியமாக தெற்காசியா முழுக்கப் பிரபலமான ஒன்று. இதன் அலாதியான சுவை காரணமாகவே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர், மலேஷியா, மொரீஷியஸ், மாலத்தீவுகள், பங்களாதேஷ்... எனப் பல நாடுகளில் பிரபலமாகியிருக்கிறது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிக எளிமையாகத் தயாரிக்கப்படுகிற, அதே நேரத்தில் பிரபலமான உணவு. பரோட்டா குறித்த சர்ச்சை அவ்வப்போது எழுவதும், ஆறிப்போவதும் இங்கே வழக்கம். பரோட்டா அப்படி என்னதான் நம் உடலுக்குத் தீங்கு விளைத்துவிடும்... தெரிந்துகொள்வோமா?    
`இலங்கையில் இருந்து வந்தது’ என்று சிலர் அடித்துச் சொன்னாலுமேகூட, பரோட்டா பிறந்த வீடு இந்தியா என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. `பராத்தா’ என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. வேத காலத்தில், `புரோதாஷா’ என்கிற உணவை, யாகம் செய்யும்போது அக்னி பகவானுக்குப் படைப்பார்களாம். அதில் பருப்பையும் நறுக்கிய காய்களையும் ஸ்டஃப் செய்திருப்பார்களாம். அந்த `பு-ரோ-தா-ஷம்’தான் `பராத்தா’ ஆனது என்கிறார்கள். ஆரம்பத்தில் பரோட்டா செய்யப் பயன்பட்டது நெய்தான். வெகு நாட்களுக்குப் பிறகுதான் எண்ணெயைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். 
வட இந்திய பராத்தா முதன்முதலில் பாகிஸ்தானின் பெஷாவரில்தான் உருவானது என்கிறார்கள். அங்கிருந்து மெள்ள மெள்ள வட இந்தியா முழுமைக்கும் பரவியதாம். ஆரம்பத்தில் குட்டி டிபனாக காலை உணவுக்கு மட்டும் இதைச் சாப்பிட்டிருக்கிறார்கள் பஞ்சாபிகள்.  
தென் தமிழகத்தில் பரோட்டாவுக்கு புகழ்பெற்ற சைடுடிஷ் சால்னாவும் குருமாவும். கூடவே, சிக்கன் குருமா, மட்டன் குருமா என்று இருந்தால் கேட்கவே வேண்டாம். இவற்றைத் துணைக்கு வைத்துக்கொண்டு நடிகர் சூரி மாதிரி, `நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்... நீ போர்டை அழி’ என்று சவால்விடச் செய்யும் சக்தி பரோட்டாவுக்கு உண்டு. வட இந்தியாவில் உருளைக்கிழங்கையும் மசாலாவையும் உள்ளே வைத்து பராத்தாவாகச் செய்கிறார்கள். ஆலு பராத்தா, சென்னா பராத்தா... என விதவிதமான வகைகள் உள்ளன. இன்னும் பனீர், காய்கறிகள், காலிஃப்ளவர், முள்ளங்கி இவற்றால் ஆன பரோட்டாக்களும் உண்டு. தொட்டுக்கொள்ள ரெய்த்தா, தால் என அமர்க்களப்படுகிறது. சில வட இந்தியர்களுக்கு பராத்தாவுக்கு வெறும் ஊறுகாயும் யோகர்ட்டுமே போதுமானது. 
வீச்சு பரோட்டா, கைமா பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சிக்கன் பரோட்டா, மட்டன் பரோட்டா, சிலோன் பரோட்டா, கேரளா பரோட்டா... எனப் பல வகைகளில் பட்டையைக் கிளப்பும் இதன் சுவைக்கு ஈடில்லை. அதனால்தான் பரோட்டா ரசிகர்கள் உலகமெங்கும் வியாபித்திருக்கிறார்கள். இன்றைக்கு, பெரும்பாலான தமிழர்களின் இரவு உணவாகிவிட்டது பரோட்டா. ஆரம்பத்தில் இது கோதுமையில் தயாரிக்கப்பட்ட வரை நம் ஆரோக்கியத்துக்குப் பிரச்னை எதுவும் இல்லை. மைதாவுக்கு மாறிய பிறகுதான் சிக்கல். இது குறித்து விரிவாகப் பேசுகிறார் அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்... 
``இன்றைக்கு பரோட்டாக்கள் தயாரிக்கப்படுவது பெரும்பாலும் மைதாவில்தான். கோதுமைக் கழிவுகள்தான் மைதா உற்பத்தியின் மூலப்பொருட்கள். தெற்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்தும் உற்பத்தி செய்கிறார்கள். மைதா வந்த புதிதில் பசை காய்ச்சுவதற்குத்தான் பயன்பட்டது. அமெரிக்காவில் இதற்குப் பெயரே `பேஸ்ட்ரி பவுடர்’ (Pastry Powder) என்பதுதான். இரண்டாம் உலகப் போர்... அதன் விளைவாக எழுந்த பஞ்சம் காரணமாக மைதாவை சமையலுக்குள் கொண்டு வந்தார்கள். சமையலுக்குப் பயன்படும் விதத்தில் மைதாவை அறிமுகப்படுத்திய பெருமை அமெரிக்காவையே சாரும். 
கோதுமைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மைதாவின் நிறம் மஞ்சளாகத்தான் இருக்கும். ஆனால், பல ரசாயனக் கலவைகளால் சுத்தம் செய்யப்பட்ட பிறகு வெள்ளை வெளேர் நிறத்துக்கு வந்துவிடுகிறது. இதற்குப் பயன்படுவது பிளீச்சிங் கெமிக்கல். தெளிவாக, புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால், பினாயிலைப் பயன்படுத்தித்தான் மைதாவை அந்த வெள்ளை நிறத்துக்குக்கொண்டு வருகிறார்கள். அதாவது, பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl Peroxide) என்ற தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம்தான் பயன்படுகிறது. இந்த ரசாயனத்தால் சுத்திகரிக்கப்படும் மைதாவை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
  மைதாவையும், அதிலிருந்து தயாரிக்கப்படும் நாண், ஃபுல்கா போன்றவற்றையும் பலரும் விரும்புவதற்குக் காரணம், அதன் மென்மைத்தன்மை. கோதுமை மாவு கொஞ்சம் கடினத்தன்மையோடு இருக்கும். கோதுமைக் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் மைதா எப்படி மென்மையாக இருக்கிறது? இதற்கும் காரணம் ரசாயனம்தான். அதன் பெயர் `அல்லோக்ஸான்’ (Alloxan). இதுதான் மைதாவின் மென்மைத் தன்மைக்கு உறுதுணையாக இருக்கிறது. இது ஒரு நச்சுப்பொருள். நம் கல்லீரலையும், சிறுநீரகங்களையும் மிக மோசமாகப் பாதிக்கக்கூடியது. அல்லோக்ஸான் ரசாயனம் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடம் பரிசோதனைக் கூடங்கள். ஒரு நோய்க்கு பொருத்தமான மருந்து கண்டுபிடிக்க பரிசோதனை நடக்கும் அல்லவா... அந்த இடம். சர்க்கரைநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க, முதலில் எலிகளுக்கு சர்க்கரைநோயை வரவழைப்பார்கள். அதற்கு அல்லோக்ஸான் ரசாயனம் கலந்த கலவையை அதன் உடலில் செலுத்துவார்கள். பிறகு, எலிகளுக்கு இன்சுலின் சுரப்பு நின்றுவிடும். 
ஆக, அல்லோக்ஸான், சர்க்கரைநோயை வரவழைக்கும் ரசாயனம். மைதாவில் இருக்கும் அல்லோக்ஸான், பென்சாயில் பெராக்ஸைடோடு இணைந்து நம் உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் உயர்ந்துகொண்டே போகும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு துணையாக நின்றதில் மைதாவுக்கும் பெரும் பங்கு உண்டு; பரோட்டாவுக்கும்!’’ என்கிறார் உமர் பாரூக். 
ஏற்கெனவே ரசாயனம் தெளிக்கப்பட்ட, பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கத்தோடு உற்பத்தி செய்யப்பட்ட தானியங்கள்தான் நம் அன்றாட உணவுக்கானவை என்கிற சூழல்.இதில், மைதாவிலும் உடலுக்கு ஒவ்வாத ஏதோ ஓர் எண்ணெயிலும் தயாரிக்கப்பட்ட பரோட்டா நமக்குத் தேவைதானா என யோசிக்கவேண்டிய தருணம் இது.  
பரோட்டா பிரியர்கள் ஒன்று செய்யலாம்... வீட்டிலேயே கோதுமையில் தயாரிக்கப்பட்ட பரோட்டாவை சாப்பிடலாம். அது ஆரோக்கியத்துக்கும் நம் எதிர்காலத்துக்கும் நல்லது. 


மூச்சுப் பயிற்சி
மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும். நமது இடது நாசி சந்திரகலை.
அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும்.
வலது நாசி சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும்.
இரண்டு நாசிகளிலும் மூச்சுக் காற்று வந்தால் சுழிமுனை என்பர்.
பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரியகலையில் ஓடும்.
அதிக வெயில்அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும்.
இது இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும்.
ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும் சமநிலையில் இருக்க வேண்டும்.
இதில்எந்த குறைபாடு நேர்ந்தாலும் நமது உடலில் பல உபாதைகள் ஏற்படும்.
ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும்.
ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில் மரணம் சம்பவிக்கும்.
மூச்சுப்பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்.
சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.
சுவாசத்தை அடக்குவதால் ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்கின்றன.
நாம் நடக்கும் போது 16 அங்குலமும், அமர்ந்திருக்கும் போது 12 அங்குலமும், ஓடும் போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடல்உறவு கொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம் நடைபெறுகிறது. சுவாசம்...
11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்.
10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்.
9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.
8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்.
7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்.
6அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.
5 அங்குலமாக குறைந்தால் காய சித்து உண்டாகும்.
4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து உண்டாகும்.
3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட சஞ்சாரம் உண்டாகும்.
2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல் சித்திக்கும்.
1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம், உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை அன்னபாணம் நீங்கும்.
சந்திரகலை என்றால் என்ன?
இடது நாசிச்(.இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்( .வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலைஎனவும் அழைக்கப்படும்.
சந்திரகலையை மதி/இடகலை/ இடைக்கால்எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
இங்கு ‘கால்’ என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது.
அதனால் தான் ‘காலனைக் காலால் உதைத்தேன்’ எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு.
இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.
‘விதியை மதியால் வெல்லலாம்’ என்பார்கள்.
இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன்.
16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் .
உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம்.
இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.
நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள்.
வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் ‘ஸ்பாஞ்’ போல காற்றுப் பைகளால் ஆனது.
வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க ‘பிராணா’ சக்தி சீராகப் பரவுகிறது .
இடது நாசி வழியாக ஓடும் மூச்சு, ‘சந்திரகலை’. இது குளுமையானது .
வலது நாசி வழியாக ஓடும் மூச்சு, ‘சூரியகலை’. இது வெப்பமானது.
வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான ‘சந்திரகலை’ அதிகரிக்கும்.
இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்.



13.11.2017 - கை கால் உணர்வில்லாமல் இருந்தால் வேப்ப எண்ணெயில் கட்டி கற்பூரம் ஊற வைத்து தினசரி தேய்த்து வர உணர்வு திரும்பும்.



14.11.2017 - வேப்பமரப்பட்டை பொடியை உடலில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளித்து வர உடல் நமைச்சல்,தடிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.



15.11.2017 - நொச்சி இலை, வாதமடக்கி இலை ஆகியவற்றை சமனளவு எடுத்து சட்டியிலிட்டு விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி இளஞ்சூட்டுடன் குதிகாலில் வைத்து கட்டவும் இவ்விதமாக 7 நாட்கள் கட்டி வந்தால் குதிகால் வாதம் குறையும்.



16.11.2017 - கீழாநெல்லி இலைகளை அரைத்து உடம்பில் தேய்த்து குளித்து வர அரிப்பு,சிறுபுண்கள் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.



17.11.2017 - கால்விரல்களுக்கு இடையிலுள்ள புண்ணை பஞ்சால் துடைத்துச் சுத்தப்படுத்திய பிறகு, திரிபலாசூரணம், கருங்காலிக் கட்டை, வேப்பிலை, எள்ளு சேர்த்து அரைத்து பூச கால்விரல் இடுக்கில் உள்ள புண் குறையும்.


18.11.2017 - அச்சம் வேண்டாம் எல்லா நோய்க்கும் தீர்வு உண்டு சித்தர்கள் மருத்துவத்தில்…….
ஆண்குறி நோய்களும் அறிகுறிகளும்
4) திரி தோஷ ஆண்குறி நோய்
இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.ஆண்குறியில் வாதம் தங்கி நாளுக்கு நாள் இரணமுடன் வீக்கம் தோன்றும்.
2.புண் ஏற்பட்டாற்போல் சிவப்பேறிக்காணும்.
3.அதிக வேதனை காண்பதுடன் சீதம் மிக எழும்
4.விம்மும் தன்மை உடைய நரம்புகள் அடங்கி போகும்.
5.அண்டமும் (விதை கொட்டை) மிக வீங்கும்.



19.11.2017 - வெண் முள்ளங்கியை எடுத்து துண்டுகளாக நறுக்கி அதனுடன் சிறிது எள் சேர்த்து குழந்தைகளுக்கு இரவில் சாப்பிட கொடுத்து வந்தால் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குறையும்.



20.11.2017 - கேரட் மற்றும் வேகவைத்த முட்டை இரண்டையும் ஒரு ஸ்பூன் தேனில் ஊறவைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.



21.11.2017 - ஒரு கைப்பிடி அளவு பிரண்டையை எடுத்து அதனுடன் சிறிது மிளகாய் சேர்த்து நன்கு கருக வறுத்து தண்ணீர் கலந்து நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி காலை, மாலை 3 நாட்கள் குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு, நீர் குத்தல் குறையும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்
உலகநாத சுவாமிகள்
இவர் 1800-ல் பிறந்தார்.அம்மன் உபாசகர்,சித்துக்கள் கைகூடப் பெற்றவர்,இவர் 1866-ல் பங்குனி உத்திராடத் தன்று ஜீவசமாதியானர், இவரது ஜீவசமாதி புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள பால் பண்ணை பேருந்து நிலையம் அருகில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி எதிரில் உள்ளது,
மெய்வழி ஆண்டவர் இவர் பிறந்தது 1857 மார்கழி 29-ல் மதுரையில் மார்க்கண்டம்பட்டி என்னும் ஊரில் ,இவர் சித்தியானது 12-12-1976-ல் கீழக்குறிச்சி கிராமத்தில் ஊரில் மலைச் சாரலில் உள்ள மெய்வழி சாலையில் ( அன்னவாசல் வட்டம் )இவரது ஜீவசமாதி உள்ளது.
புல்லான் சுவாமிகள் புதுக்கோட்டை - குழிபிறை வழி பொன்னமராவதி சாலையில் இருந்து 24.கி,மீ,தொலைவில் இருக்கும் பனையப்பட்டியில் இறங்கி ,அங்கிருந்து குழிபிறை செல்லும் சாலையில் 2.கி,மீ.தூரம் சென்றால்,தெற்கு நோக்கி உள்ள வயல்காட்டுப் பகுதியில் இருக்கும் ஆயிரம் பிள்ளை ஐயனார் கோவிலருகில் இவரது ஜீவசமாதி உள்ளது, இவரது ஜீவசமாதியைப் புதுக்கோட்டையிலிருந்து இலுப்பூர் வழியாக மணப்பாறை செல்லும் பஸ் ஏறி ராஜகிரி கிராமத்தில் இறங்கினால் அங்கு காணலாம்,
சேவக சுவாமிகள் புதுக்கோட்டை (௮) பொன்னமராவதியிலிருந்து குழிப்பிறை என்ற ஊருக்குச் சென்றால்,அங்கிருக்கும் கீரன்குடில் என்ற பகுதியில் இவரது ஜீவசமாதி

*அரிப்புஏற்படுவது ஆபத்தா?
நம் தோலில் உள்ள மாஸ்ட் செல்கள் அரிப்பை ஏற்படுத்துகிறது. நம் உடம்பிற்குள் ஏதேனும் ஒரு வேண்டாத பொருள் நுழைந்து விட்டால், அதன் எச்சரிக்கையாக இந்த அறிகுறி தென்படும்.
உடலியல் ரீதியாக அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு என்று கூறலாம்.
அரிப்பு ஏற்படுவது ஏன்?
ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதமான இம்யூனோகுளோபுலின் – ஈ (IgE)-ஐ ரத்த செல்கள் உருவாக்குகின்றது. பிடிக்காத பொருள் முதல் முறையாக நம் உடம்பிற்குள் நுழையும் போது, இந்த புரதம் உருவாகி ரத்தத்தில் இருக்கும்.
அதே ஒவ்வாத பொருள் மீண்டும் நம் உடலுக்குள் நுழையும் போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும்.
இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ஹிஸ்டமின், லுயூக்கோட்ரின் (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றி, ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும்.
அதன் விளைவாக தான் தோலில் அரிப்பு, தடிப்பு, சிவப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அரிப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன?
அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், உடலின் வெளியில் ஏற்படும் அரிப்பு மற்றும் உடலுக்குள் தோன்றும் அரிப்பு என்று 2 வகையை மருத்துவம் பிரித்து வைத்துள்ளது.
செயற்கை அழகுச் சாதனப் பொருட்கள், கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிவது போன்றவற்றால் உடல் அரிக்க தோன்றும்.
குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளமை, பிட்டத்தில் அரிப்பு மற்றும் ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்ற காரணத்தினால் அரிப்பு ஏற்படலாம்.
சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகள், துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு போன்றவற்றால் அலர்ஜியாகி, அரிப்பு ஏற்படலாம்.
வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள், குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
செல்லப் பிராணிகளான பூனை போன்ற விலங்கினங்களின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு ஏற்பட்டு தடிப்புகள் உண்டாகும்.
முதுமையில் ஏற்படும் அரிப்பிற்கு தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பு பிரச்சனை ஏற்படும்.
அரிப்பை அறிகுறியாக வெளிப்படுத்தும் நோய்கள்?
சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை காரணமாக அரிப்பு ஏற்படும்.
ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு நூல் புழு காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம்.
உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு, பித்தப்பை பிரச்சினை, மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்எனும் மூளை நரம்புப் பிரச்சினை போன்றவை நோய்களின் அறிகுறியாக அரிப்பு தென்படும். அரிப்பு வராமல் தடுப்பது எப்படி?
சில உணவுகள் ஒத்துக் கொள்ளாததால், அரிப்பினை உண்டாக்கும். அதிலும் முக்கியமாக பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் மற்றும் அரிப்பிற்கு காரணமான ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா ஆகிய மருந்துகளை அதிகம் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும்.

ஆரைக்கீரை, வல்லாரை இலை மற்றும் மணத்தக்காளி இலை ஆகியவற்றை சிறிதாக வெட்டி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை இடித்து போட்டு நீர் விட்டு ரசம் போல செய்து காலை, மாலை குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து ஞாபக மறதி குறையும்.



© 2020 SIDDHAR MEDICINE. All rights reserved